வெளியூர் சென்ற நகை பட்டறை ஓனர்..ஊர் திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

x

திருச்சி சந்துகடை அருகே சவுந்தர பாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு நகை பட்டறை நடத்தி வந்துள்ளார்... இவர் வேதாத்திரி நகரில் தான் புதிதாகக் கட்டியுள்ள வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று தங்கிய நிலையில், இன்று காலை மீண்டும் பழைய வீட்டிற்கு வந்துள்ளார்...

அப்போது வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்து 950 கிராம் தங்கம், கால் கிலோ வெள்ளி, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டதைக் கண்டு ஜோசப் அதிர்ச்சி அடைந்தார்... இது குறித்து காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்