வெளில உணவு டெலிவரி - விற்பதோ போதை மாத்திரைகள்..! - வசமாக சிக்கிய ஊழியர் - வெளியான பகீர் தகவல்

x

போதை மாத்திரைகளை வீட்டுக்கே சென்று டெலிவரி செய்து வந்த தனியார் ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக கீழ்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார், அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, போதை மாத்திரை வேண்டுமென கூறியுள்ளனர்.

இதனையடுத்து அந்த நபர் போதை மாத்திரைகளை எடுத்து வந்த போது அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணையில் அந்த நபர் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்த முனியசாமி என்பது தெரியவந்தது.

சென்னை எம்,.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவர் தன்னிடம் போதை மாத்திரைகள் கொடுப்பார் எனவும், அதை விற்றுக்கொடுத்தால் தனக்கு கமிஷன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ராஜூ போதை பொருட்களை எங்கிருந்து வாங்குவார் என்று, தனக்கு தெரியாது என முனியசாமி வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து முனியசாமியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 610 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ராஜூ என்பவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்