"எங்க TRAIN இன்னொரு TRAIN மேல..10 வினாடில எல்லாம் முடிஞ்சி போச்சு.."ஆரத்தி எடுத்த தாய்

x

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த சென்னையைச் சேர்ந்த நபருக்கு, அவரது குடும்பத்தினர் திருஷ்டி சுற்றியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். பூந்தமல்லி, கீழ்மாநகர் பகுதியை சேர்ந்த முருகன், கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்துள்ளார். அவர் விமானம் மூலம் சென்னை வந்து, வீடு திரும்பிய நிலையில், அவருக்கு திருஷ்டி சுற்றி குடும்பத்தினர் வரவேற்றனர். தான் நலமாக இருப்பதாக வீடியோ காலில் உறவினர்களுடன் அவர் பேசினார். 10 வினாடிகளில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டதாக தந்தி டிவிக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்