ஒரே மேடையில் ரூ.1.5 கோடி நிதி திரட்டிய ஓபிஎஸ்

x

அடுத்த மாநாட்டு செலவுக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலேயே ஒன்றரை கோடி ரூபாயை முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் திரட்டியுள்ளார். கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர்கள், கோவையில் அடுத்த மாநாடு நடத்த வேண்டும் என்றனர். சிலர், ஈபிஎஸ் சொந்த மாவட்டமான சேலத்தில் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர், மாநாட்டு செலவுக்காக 10 லட்சம் ரூபாயை வழங்கினார். அவரைத் தொடர்ந்து பல மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் போட்டிப்போட்டு நிதி வழங்கினர். மொத்தமாக, ஒன்றரை கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்