#Breaking || ஈரோடு இடைத்தேர்தல்.. இன்று மாலை 4 மணிக்கு.. ஓபிஎஸ் அதிரடி முடிவு

#Breaking || ஈரோடு இடைத்தேர்தல்.. இன்று மாலை 4 மணிக்கு.. ஓபிஎஸ் அதிரடி முடிவு
x


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. இச்சூழலில் தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்க கோரி கூட்டணி கட்சி தலைவர்களைச் சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்திக்க உள்ளார்.

மாலை 4 மணி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஓபிஎஸ் அணி சந்திக்கிறது. அதேபோல பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி ஆகியோரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்