#Breaking|| திமுக குறித்த கேள்வி.. ஒரு வார்த்தையில் பதில்.. சட்டென கிளம்பிய ஓபிஎஸ்

#Breaking|| திமுக குறித்த கேள்வி.. ஒரு வார்த்தையில் பதில்.. சட்டென கிளம்பிய ஓபிஎஸ்
x


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக ஈபிஎஸ் தரப்பு அறிவித்துவிட்டது. இதில் ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக ஓபிஎஸ் இன்று செய்தியாளர்களைச் சந்திப்பதாகச் சொல்லப்பட்டது. சொன்னது போலவே சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது மீண்டும் ஈபிஎஸ் உடன் பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும், அனைவரும் இணைந்து தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் கூறினார். ஈபிஎஸ் முன்வராவிட்டால், வேட்பாளரை அறிவித்து தேர்தலைச் சந்திப்போம் என்றார். அதேபோல தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை வழங்கினால், அதில் போட்டியிடுவோம், வழங்காவிட்டால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்தார். இது தவிர்த்து தந்தி டிவிக்கு அவர் பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது திமுக குறித்த கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்