டாஸ்மாக்கிற்கு எதிர்ப்பு... திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் - கடலூரில் பரபரப்பு

x

குறிஞ்சிப்பாடியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையானது வேறொரு இடத்தில் மீண்டும் திறக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

குறிஞ்சிப்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட அன்னதானபேட்டை பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு முன் டாஸ்மாக்கானது பண்ருட்டி அருகே உள்ள எல்.என்.புரம் பகுதியில் இருந்ததாகவும், சமீபத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடும்போது அதனையும் மூடியதாகவும், தற்போது அதற்கு பதிலாக இந்த இடத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் இந்த பகுதியில் டாஸ்மாக் திறக்கப்படாது என உறுதியளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்