உயர்நீதிமன்ற நீதிபதி நியமனத்திற்கு எதிர்ப்பு... வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உயர்நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விக்டோரியா கவுரி சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்பது இந்திய நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு எதிரானது என்பதால் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com