ஆபரேஷன் கஞ்சா வேட்டை... வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு... இளைஞர்கள் கைது

x

வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த இருவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி வேதபுரீஸ்வரர் நகரில் முருகன் என்பவரது வீட்டில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சம்பந்தப்பட்ட வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், வீட்டின் தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதை உறுதி செய்த போலீசார், புருஷோத்தமன், நவீன் குமார் ஆகிய இருவரை கைது செய்து கஞ்சா செடி மற்றும் 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ரோஜா செடிகள் வளர்ப்பதைப் போன்று வீட்டின் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்