16ம் தேதி சபரிமலை நடை திறப்பு
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில், ஆடி மாத பூஜைக்காக வரும் 16ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது
அப்போது, பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இதற்கான முன்பதிவு நடைபெற்று வருவதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story