கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறப்பு

x

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், நாளை மாலை அல்லது நாளை மறுநாள் அதிகாலை தமிழக எல்லையான பிலிகுண்டு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை எதிரொலியாக, கே.ஆர்.எஸ் அணைக்கான நீர்வரத்து 9 ஆயிரத்து 514 கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 2 ஆயிரத்து 500 கனஅடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையின் நீர்வரத்து 13 ஆயிரத்து 114 கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 2 ஆயிரத்து 146 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 800 கனஅடியாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்