ஊட்டி மலை ரயில் விபத்து..- வெளியான புதிய தகவல் | Ooty

x

நீலகிரி மாவட்டம் குன்னூரில், தண்டவாள சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் சேவை தொடங்கியது. நீலகிரி மாவட்டம் குன்னூரில், கோடை சீசன் தொடங்கி ஜுன் மாதம் வரை மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு, 180 சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டு சிறிது நேரத்தில், கடைசி பெட்டி தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. சம்பவ இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், ரயிலில் இருந்த சுற்றுலா பயணிகளை பேருந்துகள் மூலமாக மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்றிரவு முழுவதும் தண்டவாளம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட மலை ரயில் குன்னூர் வந்தடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்