“அப்பா குடிய விட்டுவிடு... அப்பதான் என் ஆத்மா சாந்தி அடையும்" - உருக்கமாக கடிதம்...உயிரை விட்ட மகள்

x

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஷ்ணு பிரியா. நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 410 மதிப்பெண் பெற்றுள்ளார்... கூலிதொழிலாளியான இவரின் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில்,வீட்டில் அவ்வபோது சண்டை இருந்து வந்ததாக தெரிகிறது.... இதனால் மனஉளைச்சலில் இருந்த விஷ்ணு பிரியா.வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....கடிதத்தில் தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும் என்றும்,எப்போது என் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறதோ அப்போது தான் என் ஆத்மா சாந்தி அடையும் என எழுதி வைத்துள்ளார். குடி குடியை கெடுக்கும், குடி நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு போன்ற வாசகங்கள் மதுபாட்டில்களிலேயே எழுதப்படிருக்கும் ஆனால் அதை வாங்கி குடிக்கும் மது பிரியர்களோ அதை படிப்பதும் இல்லை... பின்பற்றி நடப்பதும் இல்லை.


Next Story

மேலும் செய்திகள்