ஒரு நாளைக்கு ஒரே ஒரு பேருந்து இயக்கம்..! பள்ளி மாணவர்கள் போராட்டம்

x

கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து பணிக்கம்பட்டி, வலையப்பட்டி, ஈச்சம்பட்டி, சிவாயம், அய்யனூர், அய்யர்மலை வழியாக ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி மிகவும் சிரமம் அடைவதாக குற்றம் சாட்டு எழுந்த நிலையில் அய்யனூர் பகுதி பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கூடுதல் பேருந்து இயக்கக் கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். உடனே அங்கு விரைந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்தை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்