பான் கார்டை புதுப்பித்து தருவதாக கூறி.. 10 லட்சம் அபேஸ் செய்த மர்ம நபர் - லிங்க்கை க்ளிக் செய்ததால் விபரீதம்

x
  • சென்னையில் பான் கார்டை புதுப்பித்து தருவதாக கூறி 10 லட்சரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் பத்ரி நாராயணன். இவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், கடந்த டிசம்பர் மாதம் தனது தாயை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளார்.
  • இதனிடையே, ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்ற போது, இருமுறை ஏடிஎம்மின் நம்பரை தவறாக பதிவிட்டதால் கார்டு பிளாக் ஆகியதாக தெரிகிறது.
  • இந்நிலையில், வீட்டிற்கு திரும்பிய பத்ரி நாராயணனை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தங்களது பான் கார்டு காலாவதி ஆகிவிட்டதால் ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டது எனவும், பான்கார்டை புதுப்பித்தால் பிளாக் நீங்கிவிடும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
  • இதில், பான்கார்டை புதுப்பிப்பதற்கு அந்நபர் அனுப்பிய லிங்கை பத்ரி க்ளிக் செய்தபோது கணக்கில் இருந்து 10 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது.
  • இதனால் அதிர்ச்சியடைந்த பத்ரி போலீசில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்