ஆன்லைன் கேம் மோகம்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை.. புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை...

x

  • சென்னையில், ஆன்லைன் விளையாட்டில் ஆசை காட்டி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
  • கடந்த 2021ம் ஆண்டு, சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த உறவினரான கார்த்திக் ராகவன் என்ற இளைஞர், செல்போனில் பப்ஜி விளையாட கற்றுக் கொடுத்துள்ளார்.
  • ஆன்லைன் விளையாட்டில் சிறுமியை அடிமையாக்கிய கார்த்திக் ராகவன், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
  • மேலும், சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி, அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
  • இந்த விவகாரம் சிறுமியின் தாய்க்கு தெரியவர, இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
  • ஆனால், அப்போது காவல் ஆய்வாளராக இருந்த அமுதா என்பவர், நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்ததுடன், சிறுமியின் தாயை மிரட்டியதாக கூறப்படுகிறது.
  • பின்னர், இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு சிறுமியின் தாய் எடுத்துச் சென்றுள்ளார்.
  • நீதிமன்றம் விசாரணை நடத்தியபோது, கார்த்திக் ராகவன் பாலியல் பலாத்காரம் செய்ததை உறுதி செய்ததை அடுத்து, அவரை கைது செய்ய உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்