ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு ஆதரவாக பேரணி சென்ற நாகை எம்பி செல்வராஜ்

x

திருவாரூரில் ஓஎன்ஜிசிக்கு ஆதரவாக 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர். ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், துரப்பன பணிகளை உடனே தொடங்கிட ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது. திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில், தொடங்கிய பேரணியை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


Next Story

மேலும் செய்திகள்