"ஒருதலை காதல் கொலைகள்-தடுக்க சட்டம் தேவை" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

x

ஒருதலை காதல் என்ற பெயரில் பெண்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருதலை காதலால் மாணவி சத்யா கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்றும் பெண்களை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுப்போருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம் என்று கூறப்பட்டாலும் கூட, பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்திற்கு பெண்கள் அச்சமின்றி சென்று வர முடியாத நிலைமையே தொடர்கிறது என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்