இடி விழுந்த அதிர்ச்சியில் ஒருவர் உயிரிழப்பு

x

திருவள்ளூர் மாவட்டம், புதூர் கிராமத்தில் இடி விழுந்த அதிர்ச்சியில் முதியவர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜீவராஜ் என்ற 53 வயது முதியவர் புதூர் பகுதியில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில், மழை பெய்து கொண்டிருந்த போது தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அவர் அருகில் இடி தாக்கியுள்ளது. இந்த அதிர்ச்சியில் விழுந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை சோதித்த மருத்துவர்கள், ஜீவராஜ் ஏற்கனவே உயிரிழ்ந்ததாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்