"இன்னைக்கு ஒருநாள் என் ஆட்டோவில் Free-ஆ போலாம் வாங்க..“ - வெற்றியைக் கொண்டாடிய CSK ரசிகர்

x

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி வாகை சூடிய நிலையில், சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இன்று ஒரு நாள் முழுவதும் பயணிகளுக்கு இலவச ஆட்டோ சேவை வழங்கி வருகிறார். பூந்தமல்லியயை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகேசன் என்கிற ஸ்பீட் முருகேசன் 2011 உலகக் கோப்பை வென்ற போதும் இலவச ஆட்டோ சேவை வழங்கினார். அன்று துவங்கி தொடர்ச்சியாக 12 ஆண்டுகளாக இந்திய அணியும் சிஎஸ்கே அணியும் கோப்பை வென்றால் அன்றைய தினம் பயணிகளுக்கு இலவச சேவை வழங்கி வருகிறார் முருகேசன். தன்னால் விளையாட்டில் சாதிக்க முடியாத போதிலும், இளைய தலைமுறையை விளையாட்டில் ஊக்குவிக்க இலவச பயணத்தை அறிமுகப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்