'இதுக்கு ஒரு கோடியா..?' ஒரே மாதத்தில் குண்டும், குழியுமாக மாறிய சாலை - ஆத்திரமடைந்த ஊர் மக்கள்

x

திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி பகுதியில் இருந்து அங்கநாதவலசை வரை, ஒரு மாதத்திற்கு முன்னதாக 1 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் அந்த சாலையில் ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், தார் சாலை போடும் நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள், தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்