மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 8 பேருடன் வந்த கார் மோதி துடிதுடித்து இறந்த மூதாட்டி

x

புதுச்சேரி இளங்கோ நகரைச் சேர்ந்த பிரசனகுமாரி என்ற மூதாட்டி, தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன் மகனுடன், இன்று அதிகாலை ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பெருங்குளத்தூரில் தனியார் கல்லூரியில் பயிலும் 8 மாணவர்கள் வந்த கார், ஆட்டோ மீது மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து காரை ஓட்டி வந்த கேரளாவைச் சேர்ந்த மஹாதீர்ரை என்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்