போனா வராது..பொழுதானா கிடைக்காது..அதுவும் இன்றைக்குள்..குவிந்த கூட்டம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஓசூரில் இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது. ஓசூர் சிப்காட் பகுதியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் சார்பில் 500 பேருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டன. இலவச ஹெல்மெட்டை வாங்குவதற்கு திரளானோர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
