தீப்பிடித்து எரிந்த சவுக்கு மரங்கள் - புகை மண்டலமாக காட்சியளித்த OMR ROAD

x

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலி பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தமிழக வனத்துறை சொந்தமான சவுக்கு மரங்கள் தீப்பிடித்து எரிந்தது. இதனால், கிழக்கு கடற்கரை சாலை புகை மண்டலமாக மாறி, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தீயணைப்பு வாகனம் வர காலதாமதமானதால் அப்பகுதி இளைஞர்கள் காவல்துறையினருடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், சமார் 300-க்கும் மேற்பட்ட சவுக்கு மரங்கள் எரிந்து சாம்பலாகின. சிரமம் பாராமல் களத்தில் இறங்கி தீயை அணைக்க முற்பட்ட இளைஞர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்


Next Story

மேலும் செய்திகள்