லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து...2 பேர் உயிரிழப்பு - பலர் காயம் - நள்ளிரவில் நடந்த கோர சம்பவம்..!

x

உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் மாடுகள் ஏற்றிச் சென்ற லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னையிலிருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று மார்த்தாண்டம் நோக்கிச் சென்றது.

இந்தப் பேருந்து உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை கடந்து பால் பண்ணை அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னாள் மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது.

இதில், பேருந்தில் பயணித்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அதுமட்டுமல்லாமல், லாரியில் இருந்த 4 மாடுகள் உயிரிழந்தன.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்