பெற்றோரை தேடி டென்மார்க் டூ தமிழ்நாடு.. 41 ஆண்டாக நீடிக்கும் பாசப்போராட்டம்

x
  • 41 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து டென்மார்க் சென்ற பெண், ஓமலூர் அருகே தனது பூர்விகத்தை தேடி அலைந்து வருகிறார்.
  • டென்மார்கின் பிலாங்சர் டார்பன் பகுதியை சேர்ந்தவர் லிசா. 41 ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க் சென்ற இவர், சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் தனது பெற்றோரையும், உறவினரையும் தேடி வருகிறார்.
  • 3 வயதில் தான் தொலைந்து போனதாக கூறும் லிசா, பல்லாவரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் குழந்தைகள் இல்லத்தில் சேர்க்கப்பட்டதாகவும், அங்கிருந்து டென்மார்க்கை சேர்ந்தவர் தன்னை தத்து எடுத்து அழைத்து சென்றதாகவும் கூறுகிறார்.
  • இப்போது தனது தனது பெற்றோர், உறவினர்களை காண வேண்டும் என்ற ஆவலில் அவர்களை தேடி வருவதாகவும் லிசா தெரிவிக்கிறார்.
  • போலீசாரின் உதவியோடு தேடியும் தனது பூர்விகத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், லிசா நம்பிக்கையுடன் தனது தேடலை தொடர்ந்து வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்