"நம்ப வைத்து கழுத்தறுத்த மகன்.. கருணை கொலை செஞ்சிருங்க" - உச்சக்கட்ட வேதனையில் மூதாட்டி

x

தன்னைக் கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கூறி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் 70 வயது மூதாட்டி மனு அளித்துள்ளார். வீராபுரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மனைவி செல்லம்மாள், தனது மகனும் மருமகளும் தனது சொத்துகளை எழுதி வாங்கிக் கொண்டு, தன்னைக் கவனிக்கவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதையடுத்து மூதாட்டி செல்லம்மாளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்