நகைக்காக மூதாட்டி கொலை... பட்டப்பகலில் காட்டுக்குள் நடந்த கொடூரம் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

x

கரூர் அருகே வேப்பம்பழம் பறிக்க காட்டுக்குள் போன 65 வயது மூதாட்டி கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பள்ளி கவுண்டனூரை சேர்ந்த கன்னியம்மாள் அதே பகுதியில் உள்ள காட்டுக்குள் வேப்பம்பழம் பறிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் கன்னியம்மாள் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை தேடி காட்டுக்குள் சென்றுள்ளனர். அப்போது கழுத்து அறுபட்ட நிலையில், மர்மமான முறையில் கன்னியம்மாள் சடலமாக கிடந்துள்ளார். கன்னியம்மாள் தங்க சங்கிலி ஒன்று அணிந்து இருந்ததாகவும், அதனை பறிக்கும் போது ஏற்பட்ட போராட்டத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்