பஸ்ஸிலிருந்து ஓடிய 'ஏஜெண்ட்' தாத்தா - விரட்டி பிடித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

புதுவையில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் சுமார் 2 கிலோ போதை பொருள் கடத்திய முதியவரை, விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் போலீசார் கைது செய்தனர். கோட்டகுப்பம் மதுவிலக்கு சோதனை சாவடியில் புதுவையில் இருந்து சென்னை சென்ற அரசு பேருந்தை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதிலிருந்து ஒரு முதியவர் இறங்கி ஓடிள்ளார். அவரை மடக்கி பிடித்ததில் அவரிடம் சுமார் 2 கிலோ போதை பொருள் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்