அரசு மருத்துமனையில் கழிவறை உடைந்து... 20அடி ஆழ செப்டிக் டேங்குக்குள் விழுந்த முதியவர் - நாகையில் அரங்கேறிய கொடுமை

x
  • நாகை அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

  • நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர், கழிவறைக்கு சென்ற போது, கழிவறையின் தரைதளம் உடைந்து, 20 அடி ஆழ கழிவு நீர் தொட்டியில் விழுந்துள்ளார்.
  • கழிவு நீர் தொட்டியில் இருந்து அளறல் சத்தம் வருவதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சக நோயாளிகள் அவரை மீட்டுள்ளனர்.
  • தற்போது, முதியவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் பாஜகவினரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்