சாலை விரிவாக்க பணிக்கு தோண்டிய பள்ளம் - சடலமாக உள்ளே கிடந்த முதியவர்..

x

மணலூர்பேட்டை அருகே, சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து, முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் குச்சிபாளையம் பகுதியில், சாலை விரிவாக்கப் பணிக்காக, பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது.

இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து, ஆறுமுகம் என்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பார்வை குறைபாடு கொண்ட ஆறுமுகத்தை, அவரது குடும்பத்தினர் இரவு முதலே தேடி வந்தனர்.

இதனிடையே, பள்ளத்தில் சடலமாக கிடந்த அவரை மீட்ட போலீசார், பள்ளத்தில் தவறி விழுந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்துவிட்டு, பள்ளத்தில் வீசி சென்றார்களா? என்ற கோணங்களில், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்