குழந்தையை தூக்கி கொஞ்சி கொண்டே கழுத்தறுத்து துடி துடிக்க கொன்ற பாட்டி.. தாயையும் வேட்டையாடிய கொடூரம்

x
  • சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய கோர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது...
  • பூட்டிய வீட்டினுள் தமிழரசன் என்ற 11 வயது சிறுவனும், கேசவன் என்கிற 8 மாதக் கைக்குழந்தையுடன் சேர்ந்து அவரது தாய் வளர்மதியும் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்....
  • கணவனை இழந்து தனியே வசித்து வந்த வளர்மதி, கணவரின் மறைவுக்கு பிறகு அவர் செய்து வந்த காய்கறி தொழிலையே கையிலெடுத்து குடும்பத்தை கவனித்து வந்தார்....
  • இந்நிலையில், திடீரென வளர்மதியும், அவரது குழந்தைகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பகுதி மக்களை அதிர்ச்சியிலும், போலீசாரை குழப்பத்திலும் ஆழ்த்தியது...
  • வந்து சென்ற கொலையாளிகள் மூவரை மட்டுமில்லாமல் வீட்டில் வளர்த்து வந்த கோழிக் குஞ்சுகளை நீரில் மூழ்கடித்தும், கன்றுக்குட்டியை கத்தியால் குத்தியும் கொலை செய்திருந்தது அவர்களின் கோர வெறியை தடயங்களால் காட்டியது...
  • இந்த கொலை சம்பவத்தில் வளர்மதியின் கணவனான மறைந்த மணிகண்டனின் முதல் மனைவி பானுமதி... வளர்மதியின் தங்கையான வனிதா மற்றும் அவரது கணவர் ரஜினிகுமார்... தொடர்ந்து வளர்மதியுடைய காய்கறி வண்டியின் ஓட்டுநர் என பலர் மீது போலீசார் சந்தேகம் கொண்டனர்...
  • இதற்காக 7 தனிப்படைகள் அமைத்த போலீசார் ஒவ்வொரு படையையும் ஒவ்வொரு திசையில் அனுப்பி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்...
  • இவ்வாறு நடத்தப்பட்ட விசாரணையில் வளர்மதியுடைய தந்தையான ரங்கநாதனின் மூன்றாவது மனைவி அஞ்சலை என்கிற விமலாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அனைத்தும் அம்பலமாகி பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன...
  • அதாவது, கணவனை இழந்து 2 குழந்தைகளுடன் காய்கறி வியாபாரம் செய்து வந்த வளர்மதிக்கு சொந்தமாக வீடு ஒன்று கட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது...
  • இதற்காக சிலரிடம் கடனாக பணம் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்த வளர்மதி, தனது தந்தையின் மூன்றாவது மனைவியான சித்தி விமலாவிடம் 22 லட்ச ரூபாய் கடன் பெற்று உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகில் வீடு ஒன்றையும் கட்டியிருக்கிறார்....
  • இதன்பின் கொடுத்த பணத்தை முறையாக திருப்பி கொடுக்க இயலாததால், வளர்மதிக்கும், அஞ்சலைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது... தகராறில் பணத்தை கொடு இல்லையென்றால் புதிதாக கட்டிய வீட்டினை என் பெயரில் எழுதி கொடு என்று கேட்டிருக்கிறார் அஞ்சலை...
  • அதற்கு, வீட்டையெல்லாம் எழுதி தர முடியாது, வேண்டுமென்றால் எங்களுடன் சேர்ந்து அந்த வீட்டினுள் வசித்து கொள் என கூறியதால் அஞ்சலை ஆத்திரமடைந்துள்ளார்...
  • இந்நிலையில், சம்பவத்தன்று ஆட்களை அழைத்துக் கொண்டு வளர்மதியின் வீட்டுக்கு சென்ற அஞ்சலை, ஆட்களை வெளியே இருக்க சொல்லி விட்டு வீட்டினுள் சென்றிருக்கிறார்...
  • வழக்கம் போல் வளர்மதியிடம் பேச்சு கொடுத்த அஞ்சலை, அங்கு விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனையும், தரையில் படுத்திருந்த 8 மாத கைக்குழந்தையும் தூக்கி கொஞ்சியிருக்கிறார்...
  • பின்னர், பழைய தகராறை தூசி தட்டி பணம் கேட்கவே, பிரச்சினை ஆரம்பமாகியுள்ளது... இந்நிலையில், வீட்டை விட்டு வெளியே சென்று ஆட்களுக்கு அஞ்சலை சைகை கொடுத்த நிலையில், உள்ளே சென்ற அவரது ஆட்கள் மூவரையும் கொடூரமாக கழுத்தறுத்து பல முறை உடலில் கத்தியால் குத்தி கொன்றுள்ளனர்...
  • அப்போது அஞ்சலை வெளியே பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் வெளியே வந்தவுடன் தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது...
  • இதில், அஞ்சலையுடன் சேர்ந்து ரிஷிவந்தியம், பாசார் கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான தமிழ்ச்செல்வன், பூபாலன் ஆகியோருடன் சிவா மற்றும் நாகப்பட்டினம், கடலங்குடியை சேர்ந்த ராமு ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்...

Next Story

மேலும் செய்திகள்