"ஓ இதான் புதுசா போட்ட ரோடா?".. வாகன ஓட்டிகளை கதிகலங்கவிட்ட சாலை

x

சங்கரன்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையானது திடீரென இரண்டு அடி ஆழத்திற்கு உள்வாங்கியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில்தலைமை தபால் நிலையம் முன்பு புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் திடீரென குடீநீர் குழாய் உடைந்து 2 அடி ஆழத்திற்கு சாலை உள் வாங்கியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சங்கரன்கோவில் பகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்து சாலையின் நடுவே திடீர் திடீரென பள்ளம் ஏற்பட்டு வருவது தொடர் கதையாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். விபத்து நடப்பதற்கு முன் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்