திடீரென காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் - பொள்ளாச்சியில் பரபரப்பு | pollachi

x

பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர். வெங்கட்ரமணன் வீதியில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்காக 1949-ம் ஆண்டு காமராஜர் பெயரில் கிரையம் செய்யப்பட்டு ஆக்கிரமிப்பில் இருந்த இடம் அண்மையில் மீட்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார். இந்நிலையில், திடீரென காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர். இது காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்