“கட்டுடன் டிஸ்சார்ஜ்-ஆன அதிகாரிகள்“.. "வழக்குகளுக்கு பயந்து ஓட மாட்டோம்"

x

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் அதிகாரி காயத்ரி உட்பட 4 பேருக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து, 4 பேரது உடல்நிலை சீராக உள்ளதாக, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நான்கு அதிகாரிகளும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருமான வரித்துறை இயக்குநர் சிவசங்கரன், தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்