லூப் லைன்..ஒடிசாவை போல் சென்னையிலும்..அதிர்ச்சியில் பதறிய அதிகாரிகள்

x

சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் மின்கம்பிகள் பராமரிப்பு பணி மேற்கொண்ட ரயில் பொன்னேரி அருகே வந்து கொண்டிருந்தது. அங்கு லூப் லைனுக்கு மாறிய போது, ரயிலின் பின்புற சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. தகவல் அறிந்த ரயில்வே கோட்ட மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இயந்திரங்களின் உதவியுடன் மீண்டும் தண்டவாளத்தில் ரயிலை ஊழியர்கள் நிலை நிறுத்தினர். இதனால் ரயில் சேவையில் பெரிய பாதிப்பு இல்லை எனவும் சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தில் புறநகர் ரயில்கள் சற்று காலதாமதாக இயக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து ரயில்கள் தடம் புரளும் சம்பவங்களால் ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்