ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்து தள்ளிய அதிகாரிகள் - சுக்குநூறான காட்சிகள்

x

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கலசப்பாக்கம் அடுத்த சிங்காரவாடி ஊராட்சி நிர்வாகம், நீர்ப்பிடிப்பு பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை கட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டனர்.

அதன் பேரில், புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அதிகாரிகள் இடித்து அகற்றினர்


Next Story

மேலும் செய்திகள்