"கஞ்சா வேட்டை 4.0" 57 சப்ளையர்களை தட்டி தூக்கிய அதிகாரிகள்

x

திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 57 பேரை கைது செய்து, 16 பேரின் வங்கி கணக்கை முடக்கி எஸ்பி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழகத்தில் போதை பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் நோக்கில், கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரில் மாவட்ட எஸ்பிக்கள் அதிரடி நடவடிக்கைள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார், கஞ்சா கடத்திய 9 கஞ்சா வியாபாரிகள் ஒரே நாளில் கைது செய்து இருக்கிறார்.மேலும் கடந்த 10 நாட்களில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 57 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா வியாபாரிகளின் 16 வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்