சொத்தை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகள் - கண்ணீர் மல்க தீக்குளிக்க முயன்ற மூதாட்டி

x

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லன்விளை பகுதியை சேர்ந்த குமாரசுவாமி என்பவர் புலியூர் குறிச்சி பகுதியில் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவர்,

ஒர்க் ஷாப் இருக்கும் இடத்தின் பத்திரத்தை வீட்டின் அருகே வசித்துவரும் ஐயப்பன் என்வரிடம் அடமானம் வைத்து ரூ. 8 லட்சம் பணம் பெற்றுள்ளார். வாங்கிய பணத்திற்கு வட்டி செலுத்த முடியாததால்,

நீதிமன்ற உத்தரவுபடி, தக்கலை போலீசார் பாதுகாப்புடன் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது குமாரசுவாமி மற்றும் அவரது தாய், மனைவி குழந்தைகள் என அனைவரும், அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க வஞ்சிக்கப்பட்டதாக முறையிட்டனர். அப்போது குமாரசுவாமி தாயார் ரமணி, திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது தக்கலை காவல் உதவி ஆய்வாளர் அஷா ஜெபகர், காப்பாற்றினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.https://youtu.be/zWYtYabGJT4


Next Story

மேலும் செய்திகள்