உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அலுவலர் | "தரமற்ற உணவு-இத்தனை ஆண்டு சிறை தண்டனை

x

சென்னை அபிபுல்லா சாலையில் பள்ளி அருகே பெட்டிக்கடை, உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்தது உறுதியானதால் பெட்டிக் கடைக்கு சீல் வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ்குமார், கடந்தாண்டை விட இந்தாண்டு உணவு பாதுகாப்பு துறைக்கு 3 ஆயிரம் புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தார். தரமற்ற உணவுகளை விற்பனை செய்தால், அந்த கடைகள் குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தயங்காமல் புகார் அளித்தால் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்