நாட்டை அதிர வைத்த ஒடிசா ரயில் விபத்து..3 பேர் கைது -சிபிஐ அதிரடி

x

ஒடிசாவின் பாலாசோா் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம்2-ஆம் தேதி, மூன்று ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 275க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில், மூத்த பொறியாளர் அருண் குமார் நொஹந்தா, பகுதி பொறியாளர் முகமது அமீர் கான், தொழில்நுட்ப ஊழியர் பப்பு குமார் ஆகிய மூவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மரணம் விளைவிக்கக் கூடிய குற்றம், ஆதாரங்களை அழிக்க காரணமாக இருந்தது ஆகியவற்றுக்காக இந்தியன் தண்டனைச் சட்டத்தின் 304, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்