பல உயிர்களை காவு வாங்கிய ஒடிசா கோர விபத்து - மக்கள் மொட்டையடித்துக் பிரார்த்தனை

x

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகாவில், கடந்த 2ம் தேதி நேர்ந்த ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கோர விபத்து நடந்து 10-வது நாளை முன்னிட்டு, பஹானாகா கிராமத்தை சேர்ந்தவர்கள் நினைவேந்தல் கூட்டம் நடத்தினர். உயிரிழந்தவர்களின் நினைவாக 10வது நாள் சடங்குகள் நடைபெற்றன. பஹானாகா உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் மொட்டையடித்துக்கொண்டு பிரார்த்தனை செய்தனர். காயமடைந்த பயணிகள் விரைவில் குணமடைய வேண்டினர். நாளை மற்றும் நாளை மறுநாளும் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்