பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஒடிசா முதல்வர்

x

பிரதமர் நரேந்திர மோடியை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் டெல்லியில் சந்தித்து பேசினார்.

பிரதமரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், மாநில நலன்கள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமருடன் விவாதித்ததாக கூறினார். குறிப்பாக பூரி சர்வதேச விமான நிலையம் தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்ததாகவும், புவனேஸ்வரில் விமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், பூரியில் ஸ்ரீ ஜகன்னாத் விமான நிலையம் கட்டுவது குறித்து பிரதமருடன் ஆலோசித்ததாக முதல்வர் கூறினார்.

மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை என தாம் உணர்வதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்