பேருந்து நிறுத்தத்தில் பெண்களுக்கு ஆபாச சைகை - ரோமியோவை தட்டி தூக்கிய பெண் போலீஸ்

x

நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியில் வசித்து வரும் ஸ்டீபன் என்பவர், பார்வதிபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு, பேருந்துக்காக காத்திருக்கும் பெண்களிடம், ஆபாச சைகைகள் காட்டி வந்துள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, பெண் போலீசாரை வைத்து, ஸ்டீபனின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, போலீசார் ஸ்டீபனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதன் மூலம் நீண்ட நாட்களாக பெண்களுக்கு ஆபாச தொல்லை அளித்து வந்த ரோமியோ கைது செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்