நபிகள் குறித்து சர்ச்சை கருத்து...நுபுர் சர்மா மீது பாய்ந்த சம்மன்

நபிகள் குறித்து சர்ச்சை கருத்து...நுபுர் சர்மா மீது பாய்ந்த சம்மன்
x

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மா ஜூன் 22 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மும்ப்ரா காவல் நிலைய அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். முஹம்மத் குர்ஃபான் என்பவர் அளித்த புகாரில், கடந்த மே 29, 30 தேதிகளில் நுபுர் சர்மா மீது இரு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ஜூன் 22 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர மும்ப்ரா காவல் நிலைய அதிகாரிகள் நுபுர் சர்மாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். ஏற்கனவே தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் கொலை மிரட்டல்கள் வருவதாக நுபுர் சர்மா தெரிவித்ததையடுத்து டெல்லி காவல்துறை தரப்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்