நிர்வாண புகைப்பட விவகாரம் - நடிகர் ரன்வீர் சிங்கிடம் 2 மணி நேரம் விசாரணை

x

நிர்வாண புகைப்பட விவகாரம் தொடர்பாக மும்பை காவல் நிலையத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நேரில் ஆஜரானார். ஆங்கில பத்திரிகையின் அட்டைப்படத்திற்காக நடிகர் ரன்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்தது சர்ச்சையானது. இதுதொடர்பாக மும்பை செம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி இன்று விசாரணைக்கு ஆஜரான ரன்வீர் சிங்கிடம் சுமார் 2 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் போட்டோ ஷூட் எடுத்ததற்கான ஒப்பந்தத்தை ரன்வீர் சிங் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்