அணு ஆயுதம் - ரஷ்யாவுக்கு இந்தியா கொடுத்த அழுத்தம் | India | Russia

x

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி ஷோய்க்-குடன் இன்றுதொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, இருநாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, உக்ரைனில் மோசமடைந்து வரும் நிலைமை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த உரையாடலின்போது அழிவை ஏற்படுத்தும் குண்டுகள் மூலம் உக்ரைன் ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுவதாக செர்ஜி ஷோய்க், ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் ராஜ்நாத் சிங், அணு அல்லது கதிரியக்க ஆயுதங்களை பிரயோகிப்பது மனிதகுல கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடாது என செர்ஜி ஷோய்க்கிடம் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்