இனி வீட்டிலேயே செய்து கொள்ளலாம் இலவச டயாலிசிஸ் - வந்தாச்சு புதிய திட்டம்

x

கேரளாவில் வீட்டில் இருந்தே இலவசமாக டயாலிசிஸ் செய்துகொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். டயாலிசிஸ் திரவம், பெரிட்டோனியல் டயாலிசிஸுக்குத் தேவையான வடிகுழாய்கள் மற்றும் துணைப் பொருட்கள் மருத்துவமனைகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், முதற்கட்டமாக மாவட்ட மருத்துவமனைகளில் இதற்கான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்