சபரிமலை கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு | sabarimala

x

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நடை பயணமாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பெருவழி பாதை உள்ளிட்ட பாதைகள் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியதால் பக்தர்கள் பாரம்பரிய பாதைகள் வழியாக வர அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சபரிமலைக்கு பெருவழி பாதை வழியாக கடந்த 31ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்