புக்கிங் செய்த பெட்டியில் அமர்ந்து மிரட்டிய வடமாநிலத்தவர்கள்... சங்கிலியை இழுத்து போராட்டத்தில் குதித்த பெண்கள்

x

கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்ட பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் சேலத்தை கடந்து பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்தது.

ஓமலூர் அருகே கருப்பூர், தின்னப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே திடீரென அபாய சங்கிலியை இழுத்த 3 பெண்கள், ரயிலில் இருந்து இறங்கி போராட்டத்தில் குதித்தனர்.

விசாரணையில், முன்பதிவு செய்த இருக்கையை ஆக்கிரமித்து சிலர் மிரட்டியதாக அப்பெண்கள் புகார் தெரிவித்தனர்.

அவர்களை சமாதானப்படுத்திய ரயில்வே அதிகாரிகள், இருக்கை ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து, சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முன்பதிவு பெட்டிகளில் அமர்ந்து மிரட்டும் சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில், ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்பது பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்